திருச்சியில் இரண்டு பேரிடமிருந்து ரூ.76.80 லட்சம் மதிப்பிலான 1.57 கிலோ உருக்கிய தங்கத்தை பறிமுதல்

திருச்சியில் இரண்டு பேரிடமிருந்து ரூ.76.80 லட்சம் மதிப்பிலான 1.57 கிலோ உருக்கிய தங்கத்தை பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான இருந்த பயணியை சோதனை செய்த போது ஆசனவாயில் சில தங்க கட்டிகள் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 869.500 கிராம் எடையுள்ள 42.30 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத் இருந்தது தெரியவந்தது.

இதேபோன்று மற்றொரு பயணியிடம் இருந்து 709.500 கிராம் எடையுள்ள 34.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த இருவர் மீது சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn