உறுதிமொழியை மீறிய ரவுடி - வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க உத்தரவு

உறுதிமொழியை மீறிய ரவுடி - வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க உத்தரவு

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் 
நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு 
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருச்சி மாநகரம், 
அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, அரியமங்கலம், காந்தி தெருவைச் சேர்ந்த குலாம் தஸ்தகிர் (32), என்பவர் சரித்திரப்பதிவேடு ரவுடி மீது

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அரியமங்கலம் 
காவல்நிலைய ஆய்வாளரின் பினையப்பட்ட அறிக்கையின்படி எதிரியை 
நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்ததின் பேரில்,
வழக்குப்பதிவு செய்தும், ஒருவருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி ரவுடி குலாம் தஸ்தகிர் தாக்கல் செய்துள்ளார். அவ்வாறு மேற்படி ரவுடி குலாம் தஸ்தகிர் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, தான் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில்

ஈடுபட்டதால் அவர்மீது அரியமங்கலம் காவல்நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே உறுதிமொழி பிரமான பத்திரத்தில் 
கொடுத்த நன்நடத்தை நிபந்தனைகளை மீறியதற்காக அவர் கடந்த 26.10.21-
ந்தேதி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் 
விசாரணை செய்தும், மேற்படி நபர் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்ற செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள காலத்தை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டு, மேற்படி குலாம்தஸ்தகீர் உடனடியாக திருச்சி மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது 
கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி 
மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn