வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்காக ஒதுக்கீடு குலுக்கல் 29.10.2021 - மாவட்ட ஆட்சியர் தகவல்

வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்காக ஒதுக்கீடு குலுக்கல் 29.10.2021 - மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருச்சிராப்பள்ளி வீட்டு வசதிப் 
பிரிவிற்குட்பட்ட நவல்பட்டு, வாளவந்தான்கோட்டை, மணப்பாறை, துறையூர், அரியலூர் மற்றும் கரூர் திட்டப்பகுதிகளில் காலியாகவுள்ள மற்றும் 
விற்பனையாகமல் உள்ள வீடுகள் மற்றும்

மனைகளை விற்பனை செய்வதற்காக 
பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஒதுக்கீடு குலுக்கல் எதிர்வரும் 29.10.2021 
(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி காஜாமலை காலனியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.

எனவே, இத்திட்டப் பகுதிகளில் விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களுக்கான இந்த ஒதுக்கீடு 
குலுக்களில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn