சாரநாதன் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா

சாரநாதன் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா

சாரநாதன் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "அடிவானத்திற்கு அப்பால்" ஒரு elite lecture கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், முன்னாள் இஸ்ரோ இயக்குனர் டாக்டர் எஸ்.பாண்டியன் சிறப்புரையாற்றினார். சந்திரயான் 1 மற்றும் 3 இல் இஸ்ரோ எவ்வாறு வெற்றிகரமாக ஏவப்பட்டது, சந்திரயான் 2 இல் இருந்து கற்றுக்கொண்ட பிழைகள் என்ன? செயற்கை நுண்ணறிவு மென்மையான தரையிறக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் தனது விரிவுரையில் விளக்கினார்.

ஆதித்யா 1 பற்றியும் விளக்கினார். உலகளாவிய சவாலான விண்வெளியில் குப்பைகளை சேகரிப்பதில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவித்தார். தொடக்கத்தில் டாக்டர் டி வளவன் Principal வரவேற்றார், பேராசிரியர் ஆர்.நடராஜன் R and D head நன்றியுரை வழங்கினார்.இவ்விழாவில் 720 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision