அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி (நாளை விடுமுறை தினம் என்பதால்) ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழியினை திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி இன்று (16.09.2024) எடுத்துக் கொண்டனர். உடன், போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. (17.9.2024) அன்று விடுமுறை தினம் என்பதால், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று (16.9.2014) மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா, துணை ஆணையர் கே.பாலு, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16.09.2024) சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision