சமயபுரம் தங்கைக்கு சீர்வரிசை தந்த ஸ்ரீரங்கம் அண்ணன்

சமயபுரம் தங்கைக்கு சீர்வரிசை தந்த ஸ்ரீரங்கம் அண்ணன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்பாக கோவிலாக உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை வளையல்கள் மாலைகள், சந்தனம், குங்குமம் மஞ்சள், பழம் வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடக்கரைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்திலிருந்து மங்களப் பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள்

தலையில் சுமந்தும், கையில் ஏந்தி வரும் ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.

இதனையெடுத்து அம்பாளுக்கு ரங்கநாதர் கோவில் சார்பில் வழங்கப்பட்ட பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவைகள் அணிவிக்கப்பட்டு மங்களப் பொருட்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn