தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பள்ளியை தூய்மை செய்த மாணவர்கள்

தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பள்ளியை தூய்மை செய்த மாணவர்கள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் 1 வது வார்டில் ஸ்ரீ காஞ்சி அம்மன் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

இவற்றை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுத்தம் செய்கின்றனர். இதன் வீடியோ வெளியாகி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கழிவறை சுத்தம் செய்யாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளது. வகுப்பறை மற்றும் கழிவறைகளை தூய்மை செய்ய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision