மணப்பாறையில் +1 மாணவிக்கு கத்தி குத்து வழக்கில் திடீர் திருப்பம் – கத்தியால் குத்தி சென்ற வாலிபர் இரயில் பாதையிலிருந்து சடலமாக மீட்பு

மணப்பாறையில் +1 மாணவிக்கு கத்தி குத்து வழக்கில் திடீர் திருப்பம் – கத்தியால் குத்தி சென்ற வாலிபர் இரயில் பாதையிலிருந்து சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திகுளம் (எ) கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் 16 வயது மகள் திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (மே 31) மாலை பள்ளியில் தேர்வு முடிந்து வீடு நோக்கி நடந்து சென்ற மாணவியை திருச்சி ரயில்ரோடு மேம்பாலத்தின் அருகே வாலிபர் ஒருவர் மாணவியின் கழுத்து உட்பட பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கீழபூசாரிப்பட்டி இரயில்வே கேட் அருகில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடப்பதாக இரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற இரயில்வே போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் உடல் மணப்பாறை போலீஸாரால் +1 மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி தேடப்பட்டு வந்த கேசவன் தான் என்பது தெரியவந்தது. கேசவனின் தந்தை நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய இரயில்வே போலீஸார் உடற்கூராய்விற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO