உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் - தமிழக முதல்வர் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விவசாய பெருங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்வில், வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, தோட்டக்கலை துணை இயக்குநர்கள் சரண்யா (தோட்டக்கலை துறை), கண்ணன் (விதை ஆய்வு), சொர்ணபாரதி (வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம்), வேளாண் பொறியியல் துறை
செயற்பொறியாளர் கந்தசாமி, மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை கணபதிமாறன், வேளாண்மை உழவர் -நலத்துறை அலுவலர்கள், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.