மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர்களிடம் நிதி பெறப்பட்டு, இரண்டாம் கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது மற்றும் மணப்பாறை திமுக நகரச் செயலாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் மலைத்துரை, மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவிடம் ரூபாய் 37 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள், ஆக்ஸி மீட்டர்கள், நெபுலைசர்கள், பிளாஸ்டிக் சேர்கள் உள்ளிட்ட பொருட்கள்களை வழங்கினர். 

அதேபோல் புத்தாநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான ஆக்ஸி மீட்டர்கள், கையுறைகள், முக கவசம் உள்ளிட்டவைகள் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சந்தோஷிடம் வழங்கினர். இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள்,  திமுக மனிதநேய மக்கள் கட்சியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve