திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண் :15ல், தாராநல்லூர் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் வரப்பெற்றது.

எனவே, இக்குடியிருப்புக் கட்டுமானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திட, திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் சிறப்பு வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த வல்லுநர் குழுவினர், இக்கட்டுமானத்தின் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து 
அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்,

இக்கட்டுமானம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn