காவிரி பாலத்தில் விபத்து - வாலிபர் பலி

காவிரி பாலத்தில் விபத்து - வாலிபர் பலி

திருச்சி உறையூரை சேர்ந்த காத்தபரிமனம் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு காவேரி பாலத்தில் காத்தபரிமனம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தால் காவேரி பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision