பாஜக அதலபாதாளத்திற்கு சென்று விட்டது - திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

பாஜக அதலபாதாளத்திற்கு சென்று விட்டது - திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி லாவண்யா பயின்ற பள்ளி மைக்கேல்பட்டிக்கு மாணவியின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்....

தமிழகத்தில் பாஜக நகர்ப்புற தேர்தலில் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் திமுக வாக்கு பெற்ற சதவீதத்தில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்றார். மூன்றாவது இடம் பெற்றிருக்கிறோம் என்று அவர்கள்தான் கூறுகிறார்கள். புள்ளி 5 சதவீதம் தான் சட்டமன்ற தேர்தலை விட தற்போது அவருடைய பார்த்து சதவீதம் கூடுதல் என குறிப்பிட்டார். சில இடங்களில் அதிமுக விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம் என பாரதிய ஜனதா கட்சி கூறுவது அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல்.

கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து இருக்கும் பாஜகவிற்கு இது சரிவு அதிமுக அவர்களை கழற்றி விட்டு உள்ளது. பாஜக அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார். மைக்கேல்பட்டியில் மாலை லாவண்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒரு அரங்கில் நடைபெறுகிறது. அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது வாக்களித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn