மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே ஏறிய மாவட்ட ஆட்சியர்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே ஏறிய மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே ஏறி அதன் உள்பகுதியில் குடிநீர் வினியோகம் மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிப்பது (குளோரினேசன் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஜீயபுரத்தில் உள்ள பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision