காயமடைந்த ஆசிரியரை தனது காரில் ஏற்றி சிகிச்சைக்கு அனுமதித்த ஆட்சியர்

காயமடைந்த ஆசிரியரை தனது காரில் ஏற்றி சிகிச்சைக்கு அனுமதித்த ஆட்சியர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா திருவெள்ளரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வழக்கம்போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வடக்குப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் தலைமை ஆசிரியர் காயமடைந்தார்.

உடனே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த வழியாக வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை தனது காரில் ஏற்றி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO