மாநகர சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்த மாநகராட்சி

மாநகர சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்த மாநகராட்சி

திருச்சி ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் சாலையோரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க, கால்நடைகளைப் பிடித்து உரிய இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சிந்தாமணி அண்ணா சிலை அருகே சாலையோரங்களில் சுற்றி திரிந்த கால்நடைகள் பிடித்து பராமரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO