மது குடிக்க பணம் கேட்டு தகராறு மகனின் கை கால்களை கட்டி கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தகராறு மகனின் கை கால்களை கட்டி கொலை செய்த தந்தை கைது

திருச்சி செந்தநீர்புரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவருடைய மகன் வில்சன் ஆண்ட்ரூஸ் (33) திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். வில்சன் அண்ட்ரூஸ் கடந்த சில மாதங்களாகவே வேலைக்குச் செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையாகி பலரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் மது போதையில் வீட்டிற்கு வந்து தந்தை அற்புதராஜிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அற்புதராஜ் வீட்டில் தனியறையில் போதையில் படுத்து கிடந்த வில்சன் ஆண்ட்ரூஸின் கை கால்களை கயிற்றால் இறுக்கி கட்டி, துண்டால் ஆண்ட்ரூஸ் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். ஆனால் அவர் இறக்காத நிலையில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரது மகனின் கழுத்தில் பலமுறை சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வில்சன் ஆண்ட்ரூஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி அறிந்த அருகில் உள்ளவர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட வில்சன் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தந்தை அற்புதராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn