உயர் அதிகாரி உத்தரவால் பணி செய்த பொழுது மின்சாரம் தாக்கி கேங்மேன் கவலைக்கிடம்

உயர் அதிகாரி உத்தரவால் பணி செய்த பொழுது மின்சாரம் தாக்கி கேங்மேன் கவலைக்கிடம்

தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டி சேர்ந்த கேங்மேன் ராஜீவகாந்தி (ஒப்பந்த தொழிலாளர்) திருச்சி மலைகோட்டை பிரிவில் பணிபுரிகிறார்.

ராஜீவ்காந்தியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மிளகு பாறை 110kv ssயில் பணி செய்ய உயர் அதிகாரி வாய் மொழி உத்தரவு சொன்னதால், பணி செய்து கொண்டு இருந்த போது மின் விபத்து எற்பட்டு காவேரி மருத்துவமனையில் தீவிர சிக்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

உயர் அதிகாரி உத்தரவால் பணியில் செய்த போது முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் பணியில் ஈடுபட வைக்கவில்லை என தகவல் ஊழியர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தற்பொழுது தனியார் மருத்துவமனையில் உயரதிகாரிகள் சொந்த செலவில் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision