திருச்சியில் கார் கண்ணாடியை லாவகமாக உடைக்கும் திருடன்

திருச்சியில் கார் கண்ணாடியை லாவகமாக உடைக்கும் திருடன்
கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவ்ராய்(26) என்பவர் திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி இருந்து கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். 

இவரின் காரை மேன்சன் வாசலில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வந்து பார்த்த போது அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரில் இருந்த பை மற்றும் 4 ஆயிரத்து 500 ரூபாய் திருடப்பட்டிருந்தது தொிய வந்துள்ளது. இது குறித்து ஸ்டீவ்ராய் திருச்சி தில்லைநகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் உள்ள கேமிராவில் திருட்டு காட்சி தௌிவாக பதிவாகி உள்ளது. திருடன் ஒருவன் கவண் உதவியுடன் கல்லால் கார் கதவு கண்ணாடியை உடைக்கின்றான். பின்னர் காரில் வைக்கப்பட்டிருந்த பையை துாக்கி கொண்டு எஸ்கேப் ஆவது கேமிராவில் தௌிவாக பதிவாகி உள்ளது.