வெறுப்பு செய்யவில்லை விருப்பு தான் மட்டும் தான் - அமைச்சர் துரைமுருகன் திருச்சியில் பேட்டி

வெறுப்பு செய்யவில்லை விருப்பு தான் மட்டும் தான் - அமைச்சர் துரைமுருகன் திருச்சியில் பேட்டி

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருச்சி விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... காவிரி குண்டாறு இணைப்பு நல்ல திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை.

இந்த திட்டத்தில் மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும். தமிழகத்தில் வட மாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெற்றி திசை திருப்பவும்,

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்ப வேண்டும் என சிலர் செய்த சிறுபிள்ளைதனமான செயல். திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல்  விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும்.

அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டங்களை அரசு தற்போது தற்போது செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறும் போது செய்த செயல்பாடுகளை முடக்கப் பார்ப்பார்கள். ஆனால் திமுக அரசு அந்த திட்டங்களை செய்து வருகிறது.

திமுக அரசு கவிழ்க்க முயல்வதாக திமுக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும் என அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn