மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விற்பனை செய்த மூவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விற்பனை செய்த மூவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை ரோடு பகுதியில் கடந்த 12.07.2021-ஆம் தேதி, உறையூர், சாலை ரோடு பகுதியைச் சேர்ந்த சக்திதாசன், (31), என்பவர் அவரின் மனைவி ருத்ராதேவி பெயரில் ஸ்ரீ பார்மஸி என்ற மொத்த மருந்து விநியோகம் செய்யும் உரிமம் எடுத்து அந்த உரிமத்தை வைத்து கள்ளத்தனமாக திருப்பூரில் உள்ள மருந்து கடை மூலமாக

உறையூர், வடிவேல் நகரைச் சேர்ந்த குமார், (23), வரகனேரி பஜார், தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராம்நாத், (31), தென்னூரைச் சேர்ந்த, நந்தகுமார் (24), உறையூர், நவாப் தோட்டம், நெசவாளர் காலனியைச் சேர்ந்த பாலாஜி (20), காந்தி மார்க்கெட், சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த பிரகாஷ் 26, மற்றும் உறையூர், வெக்காளியம்மன் நகர்,நாடார் தெருவைச் சேர்ந்த குமார் (எ) குமரேசன் (24), ஆகிய ஆறு எதிரிகள் சேர்ந்து கொண்டு மேற்படி மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்தது.

எனவே சக்திதாசன் உள்ளிட்ட எதிரிகள் ஏழு நபர்களையும் கைது செய்து கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சக்திதாசனின் மொத்த உரிம சான்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து  ரூ.1,50,000/- சந்தை மதிப்புள்ள போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள், ஊசிகள், ரூ.50,000/- மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா, அவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் 6 செல்போன்களும் கைப்பற்றப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் 1) சக்திதாசன், 2) குமார் மற்றும்  3) ராம்நாத் ஆகிய மூவரும் தொடர்ந்து இதுபோன்று மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்யும் குற்றச்செயலில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்படி 3 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதன்படி மேற்படி எதிரிகள் மூவருக்கும் 20.08.2021 அன்று மருந்து சரக்கு குற்றவாளிகள் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஆணை சார்வு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn