தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜயின் 47-வது பிறந்த நாளான முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக அவருடைய ரசிகர்கள் பலரும் பல வகைகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்த கொரோனா காலகட்டத்தில் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்து வந்தனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 70 தூய்மை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கியதோடு இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும்  இலவச சேலைகள் வழங்கியுள்ளனர்.

திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளான மத்திய தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் கே.கே நகர் வினோத், ஸ்ரீரங்கம் பாபு, மல்லியம்பத்து சிவா, ரஜினி முருகன் svg செந்தில் மதர்லேண்ட் விக்னேஷ், கார்த்திக் ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் நகர தலைவர் பால்பாண்டு, லால்குடி விக்னேஷ், தென்னூர் கண்ணன், தில்லை நகர் சக்தி, சங்கிலியாண்டபுரம் சசி தினேஷ். காந்திநகர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF