திருச்சி மாநகர காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருச்சி மாநகர காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

நாடு முழுவதும் வரும் 31ல் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை அச்சமின்றி பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பிரபாத் ரவுண்டானாவில் இருந்து பெரிய கடைவீதி, மலை வாசல், அண்ணா சிலை வரை காவல் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO