திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வருக்கு அமைச்சர் அஞ்சலி

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வருக்கு அமைச்சர் அஞ்சலி

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும், முதல்வருமான முனைவர் ஜான் பிரிட்டோ (78) நேன்று மாலை மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறைவனடி சேர்ந்தார்.

இந்தச் செய்தியை அறிந்ததும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புனித செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இயேசு சபையின் அருட் சகோதரர்களுக்கும், கல்லூரியின் பேராசிரியர் மாணவர்கள் ஆகியோருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார். உடன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் மோகன் ஆகியோர் இருந்தனர்‌.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision