வீட்டிற்கு புது மின் இணைப்பு வழங்க ரூபாய் 18000 லஞ்சம் வாங்கிய திருச்சி மின்வாரிய ஆய்வாளர் கைது

வீட்டிற்கு புது மின் இணைப்பு வழங்க ரூபாய் 18000 லஞ்சம் வாங்கிய திருச்சி மின்வாரிய ஆய்வாளர் கைது

திருச்சி BHELயில் ஊழியராக பணியாற்றுகிறார்  நியாத் ஷகியா .இவர் நவல்பட்டு ஆர் எஸ் கே நகரில் உள்ள  தன்னுடைய புதிய வீட்டிற்க்கு மின் இணைப்பு பெற நவல்பட்டு மின் வாரிய அலுவலகத்தை சென்றுள்ளார்.அப்பொழுது மின்வாரிய அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணிபுரியும் விக்டர் என்பவரை புதிய மின் இணைப்பிற்காக சந்தித்து பேசுகிறார். உங்கள் வீட்டிற்கு புதிய மின் இணைப்பிற்கு வழங்க வேண்டும் என்றால் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க  மனம் இல்லாத நிலையில் திருச்சி ஒழிப்பு போலீசாரை நாடியுள்ளார். இன்று 18 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை பொழுது நியாத் சாகிய விக்டரிம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO