நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மறைவிற்கு திருச்சியில் அஞ்சலி

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மறைவிற்கு திருச்சியில் அஞ்சலி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் தோழர் எம் செல்வராசு மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சியில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு மேற்குப் பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொது செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் S சிவா, துணைச் செயலாளர் C.செல்வகுமார், பொருளாளர் A.சண்முகம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் M.R.முருகன், மேற்கு பகுதி துணைச் செயலாளர் க.முருகன், மேற்கு பகுதி பொருளாளர் B ரவீந்திரன், மாணவர் பெருமன்ற மௌ.ஜெய்லானி ,

இளைஞர் பெருமன்ற T.விஷ்வநாத் , K. நாகராஜ் , S.மௌலானா மற்றும் பலரும் பங்கேற்று மறைந்த தோழர். செல்வராசுவின் திருவுருவப்படத்திற்கு உறையூரில் அஞ்சலி செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision