அரசு பேருந்து நடத்துனரை தாக்க முயன்ற திருச்சி மாணவர்கள் - சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்துகள்

அரசு பேருந்து நடத்துனரை தாக்க முயன்ற திருச்சி மாணவர்கள் - சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்துகள்

திருச்சி கண்ட்டோன்மெண்ட் அருகே உள்ள ( ஆர்.சி மேல்நிலை பள்ளி  தனியார் பள்ளி) பேருந்து நிறுத்ததில் அரசு பேருந்து நின்ற போது பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் சிலருக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடத்துனரை மிகவும் தரக்குறைவாக பேசி தாக்க முயற்சித்தனர். பின்னர் ஓட்டுநர் நடத்துனரும் பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று அரசு பேருந்து நடத்துனர்கள் ஒன்று சேர்ந்து சாலையில் பேருந்துகளை நிறுத்தி வைத்தனர். கன்ட்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கண்ட்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும், பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு தவறிழைத்த மாணவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பாரதியார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO