விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜியோ சிம்மை பிஎஸ்என்எல் - க்கு மாற்றிய திருச்சி இளைஞர்கள்!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜியோ சிம்மை பிஎஸ்என்எல் - க்கு மாற்றிய திருச்சி இளைஞர்கள்!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜியோ சிம்மை பிஎஸ்என்எல் - க்கு மாற்றி திருச்சி இளைஞர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு முன்பாக சுமார் பத்திற்கும் மேற்பட்ட திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தாங்கள் உபயோகித்து வந்த ஜியோ சிம்மை பிஎஸ்என்எல்-க்கு மாற்றினர்.

Advertisement

இதுகுறித்து மண்ணச்சநல்லூரை சேர்ந்த இளைஞர் அசோக் ராஜா கூறுகையில்... "கடும் குளிரில் 18 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு காதில் கேட்க வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றனர். மத்திய அரசிற்கு பின்னாலிருந்து கார்ப்பரேட் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய ஜியோ சிம்மை பிஎஸ்என்எல்-க்கு மாற்றுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள பாதி பேர் ஜியோ சிம் உபயோகப்படுத்துகிறார்கள்.

இதனை இளைஞர்கள் முன் வந்து பிஎஸ்என்எல் - க்கு மாற்றினால் மத்திய அரசு காதில் விழும் என நாங்கள் நம்புகிறோம். இதற்காக ஒரு இயக்கத்தையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்" என்றார்

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO