சென்னை திமுக வேட்பாளர்  செல்வம் கொலை வழக்கில் திருச்சியில் இருவர் கைது  

சென்னை திமுக வேட்பாளர்  செல்வம் கொலை வழக்கில் திருச்சியில் இருவர் கைது  

சென்னை மடிப்பாக்கம் திமுக கிளைச் செயலாளர் செல்வம் கடந்த பிப்ரவரி 1 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
   கொலை வழக்கு தொடர்பாக ராதாகிருஷ்ணன், 42/22 நாடார் த/பெ. முருகன், மணிப் பிள்ளை 2வது தெரு, 
ராஜகீழ்பாக்கம் சோலையூர்,மற்றும் கார் ஓட்டுனர் தனசீலன், 41 கோவில்பிள்ளை, பிள்ளையார் கோவில் தெரு,
 கொங்குநாடு, திருவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இருவரையும் சமயபுரம் டோல்பிளாசாவில் சமயபுரம் போலீஸார் கைது செய்தனர்.

சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்,
 மேலும் மேற்படி இருவரையும் மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு பின்தொடர்ந்து வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது இவர்கள் தற்பொழுது சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கைது செய்யபட்ட நபர்கள் கடந்த 
1.2.2022 ஆம் தேதி திமுக மடிப்பாக்கம் கிளை செயலாளர் செல்வம் கொலை செய்த வழக்கு குற்றவாளிகள் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn