வாசன் ஐ கேர் குழும நிர்வாகி தற்கொலை!

வாசன் ஐ கேர் குழும நிர்வாகி தற்கொலை!

வாசன் ஐ கேர் குழும நிர்வாகி தற்கொலை!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் நெருக்கமாக வலம்வந்தவர் அருண் முருகையா.  கரூர் முன்னாள் எம்.பி மறைந்த

முருகையாவின் மகனான  இவர் திருச்சி ABC மருத்துவமனையின் முன்னாள் சேர்மன். மேலும், வாஸன் மெடிக்கல்ஸ்,  வாஸன் Eye care உள்ளிட்ட நிறுவனங்களின் வாசன் குழும நிர்வாகியாக இருந்தவர். 

Advertisement

அரசியலை பொறுத்தவரை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், அவரது‌ மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் நெருக்கமாக இருந்தவர். ப. சிதம்பரத்தின் பினாமி இவர் என்கிற பரவலான பேச்சும் இவர் மீது வரும். 

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளான நேற்று, அருண் முருகையா சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவரை உடனடியாக சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாருக்கு தரப்பட்டது அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான சில நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்

பல கோடி ரூபாய் கடன் உள்ளதாக அவரே அவருக்கு வேண்டிய நபர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அருண் முருகையா தற்கொலை செய்து கொண்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் முக்கிய பிரமுகருடன் நெருக்கமானவர்கள் மர்மமான முறையில் இறப்பதும் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.