ஏலத்தில் எடுத்த நகைகளை ஒப்படைக்கச் சொல்லி, திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வற்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண் வீடியோ வெளியீடு

ஏலத்தில் எடுத்த நகைகளை ஒப்படைக்கச் சொல்லி, திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வற்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண் வீடியோ வெளியீடு

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த சுதா என்பவர் மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தில் ஏலத்தில் வந்த நகையை எடுத்து உள்ளார். இந்த தங்க நகைக்கு பலபேர் உரிமை கோரி வருகின்றனர்.

ஆனால் தான் நகை ஒப்படைக்கத் தயார் என்றும், நேரடியாக நீதிமன்றத்தில் தங்க நகைக்கான ஆவணங்கள் கொடுத்து   வாங்கிக் கொள்ளவும் என்று சொல்வதால் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் தன்னை அடைத்து வைத்து மிரட்டுவதாக சுதா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ உண்மை தன்மை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I