பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருச்சி விஷன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்.

பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருச்சி விஷன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்.

பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருச்சி விஷன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் விதமாகவும், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்று துறை மற்றும் திருச்சி விஷன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். முன்னதாக வாக்குக்கு பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது என்பதை வலியுறுத்தி ஊமை நாடகம் நடத்தி காட்டினர். பின்னர் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் பெமிளா அலெக்சாண்டர், கெளரவ தலைவர் அருளானந்த், எலிசபெத், உதவி பேராசிரியர்கள் அங்கேலஸ்வரி, மனுநீதி, நிறைமதி மற்றும் ஜெஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.