திருவெறும்பூரில் அரசின் உதவியோடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அதிமுக வேட்பாளர் ப.குமார் வாக்குறுதி

திருவெறும்பூரில் அரசின் உதவியோடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அதிமுக வேட்பாளர் ப.குமார் வாக்குறுதி

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தொடர்ந்து தனது தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பெல் ஊரக குடியிருப்பு, எழில்நகர் ஆகிய பகுதிகளில் மக்களை வீடு வீடாக நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் ப.குமாருக்கு ஆரத்தி எடுத்தும், பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை அதிமுக வேட்பாளருக்கு தெரிவித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது ப.குமார் பேசுகையில்,.. திருவெறும்பூர் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அதிமுக அரசின் சார்பில் இந்த பகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற இடங்களில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசின் உதவியோடு செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU