மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுகிறதா - திருச்சியில் மருந்தகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுகிறதா - திருச்சியில் மருந்தகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பிரசவகால நேரத்தில் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்துகள், தூக்கமாத்திரை போன்ற மருந்துகளை இளைஞர்களின் போதைக்காக அதிக லாபத்திற்கு விற்க்கப்படுவதாக முசிறி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருச்சி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் வைத்தியநாதன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அந்த மருந்தகத்தில் உள்ள வவுச்சர் பில்களை ஆய்வு செய்தார்.

முசிறி காவல் ஆய்வாளர் விதுன்குமார், உதவி ஆய்வாளர் முத்தையன் மற்றும் காவலர்கள் முன்னிலையில் குறிப்பிட்ட மருந்துகளின் பதிவேடுகளை கைபற்றி கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO