தெரு விளக்கு எரியாததால் சிமிலி விளக்கு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

தெரு விளக்கு எரியாததால் சிமிலி விளக்கு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

திருச்சியில் தெரு விளக்குகள் எரியாததால் குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

திருச்சி மாநகராட்சியின் 23வது வார்டுக்கு உட்பட்ட செங்குளம் காணியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தெருவிளக்குகள் இயங்கவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து அதன் நிர்வாக பொறியாளரிடம் சிமினி விளக்கு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் பாஜக பாலக்கரை மண்டல தலைவர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் சிமிலி விளக்கு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.