பஸ் மோதியதில் காலை இழந்தவருக்கு 1 கோடியே 67 லட்சம் இழப்பீடு - திருச்சி நீதிமன்றம் உத்தரவு

பஸ் மோதியதில் காலை இழந்தவருக்கு 1 கோடியே 67 லட்சம் இழப்பீடு - திருச்சி நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் வயது 37. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் மனைவியின் சொந்த ஊரான திருச்சி குண்டூர் ராகவேந்திரா நகருக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கிக்கொண்டார். மனைவியின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது 12/06/2018ம் தேதி அன்று திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் சென்றபோது தனசேகரன் பாண்டியன் மீது அந்த வழியாக சென்ற அரசு பஸ்  மோதியது.

இந்த விபத்தில் தனசேகரன் பாண்டியன்  தனது வலது காலை இழந்துவிட்டார். ஆகையால் அவர் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் வலது காலை இழந்ததற்கு நஷ்ட ஈடு  கேட்டு தனசேகர பாண்டியன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி  சோமசுந்தரம்  பாதிக்கப்பட்ட ராணுவ  வீரருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 1 கோடியே67 லட்சத்து 84,020 வழங்கவேண்டுமென தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் தரப்பில் வக்கீல் முத்துமாரி ஆஜராகி வாதாடினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO