திருச்சி மாநகரில் 55 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

திருச்சி மாநகரில் 55 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி சின்ன செட்டி தெருவில் கடை வைத்து இருக்கும் ஞானசேகரன் மற்றும் சக்கரபானி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது வீட்டின் மாடியில் சுமார் 55 கிலோ தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது. மேலும் வழக்கு பதிவு செய்வதற்காக 3 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டது.

பின்னர் மேல் நடவடிக்கைக்காக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களும் சம்பந்தபட்ட இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn