திருச்சி விமான நிலையத்தில் 8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது  பயணி ஒருவர் தனது

உடமைகளில எடுத்துவந்த துளையிடும் இயந்திரத்தில் மறைத்து எடுத்து வந்த 153 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு ரூபாய் 7.88 லட்சம் என தெரிய வருகிறது. கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn