800 கோடி தமிழக முதல்வர்தான் கொடுக்கிறார் - அமைச்சர் பேச்சு.

800 கோடி தமிழக முதல்வர்தான் கொடுக்கிறார் - அமைச்சர் பேச்சு.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஒன்றியம், கூடபள்ளி மற்றும் ஏழு கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 73.97 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என் நேரு.... 1972ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது குடிநீர் வளங்கள் திட்டம். நீரை சுத்திகரிப்பு திட்டத்தை துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கரூர் உள்ளிட்ட பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2000 பேர் செய்ய வேண்டிய பணியை 200 பேர் செய்கின்றனர். தமிழக முதல்வர் பார்த்துவந்த துறை என்பதால் நிதி அதிகமாக வழங்கி வருகின்றனர். 4.4 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2008 mlt லிட்டர் 5 கோடி பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 3 ஆண்டு காலத்த்தில் 3.75 கோடி மக்களுக்கு இந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீர் போர் அமைக்கும் இடங்களில் நிலத்தடி நீர் குறையும் என்று அப்பகுதிமக்களால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. ஜல்ஜீவன் ஜீவன் திட்டத்துக்கு 1000 கோடி என்றால் 800 கோடி தமிழக முதல்வர் தான் கொடுக்கிறார்கள். மத்திய அரசு 100 கோடி தான் கொடுக்கிறது. 

குளித்தலை மருங்காபுரி பகுதியில் 1000 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் நடைபெறுகிறது. 1 கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு உள்ளது. மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. இதனால் நிதி நெருக்கடி உருவாகி உள்ளது. 

நிதியை பெற வேண்டும் என்ற முயற்சியை எடுத்துள்ளோம் நிச்சயம் பெருவோம். திருச்சிக்கு மட்டும் 4000 கோடி ரூபாய் தமிழக முதல்வர் கொடுத்துள்ளார். 15 மாநகராட்சியில் இருந்து 25 மாநகரட்சியாக உயர்த்தப்பட்டு உள்ளது என பேசினார். தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா , கலைஞர் கனவு இல்ல திட்டம் , குடும்ப அடையாள அட்டை , விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியகாராஜன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision