முதல்வர் திறந்து வைத்த அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி 69 கோடி மதிப்பீட்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்காக தரைதளம் முதல் தளம் என வகுப்பறைகள் ஆய்வுக்கூடங்கள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. மேலும் 440 மாணவர்களும் 440 மாணவிகளும் தங்கும் தனி விடுதியும் கட்டப்பட்டுள்ளன
இந்த அரசு மாதிரி பள்ளியை கடந்த 8ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவரிடம் கலந்து உரையாடி விட்டு சென்றார். இந்த அரசு மாதிரி பள்ளியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பயாலஜி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அரசு மாதிரி பள்ளி வளாக முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அறிந்த துவாக்குடி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில்
தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சக மாணவியரிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி இருந்தது குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.