பள்ளிவாசலில் பிடிபட்ட 6 அடி நீள பாம்பு

பள்ளிவாசலில் பிடிபட்ட 6 அடி நீள  பாம்பு

திருச்சிவட்டம் மணப்பாறை பள்ளிசல் பகுதியில் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பு திங்கட்கிழமை தீயணைப்புத்துறையினரால் பிடிபட்டது.

மணப்பாறையில் மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள பள்ளிவாசலில் திங்கட்கிழமை இரவு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அங்கிருந்த குழாய்களின் உள்ளே சென்ற பாம்பு பதுங்கி கொண்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு குழாயிலிருந்து 6 அடி நீள சாரை பாம்பினை துறை கருவிகள் மூலம் பிடித்தனர். பின் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. பள்ளிவாசல் பகுதியில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO