100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என போஸ்டர் அடிக்கலாம் - கே.என்.நேரு

100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என போஸ்டர் அடிக்கலாம் -  கே.என்.நேரு

100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் அடிக்கலாம் - முதலமைச்சர் என த.வெ.க தலைவர் விஜய்க்கு போஸ்டர் அடித்தது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு கருத்து.திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட

செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த அந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். திருச்சி மண்டலத்தில் 41 தொகுதிகள் உள்ளது. தற்போதைய சூழலில் 41 தொகுதிகளிலும் திமுக தான் முழுமையாக வெற்றி பெறும் என்கிற நிலை உள்ளது.கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள பிரச்சனைகள், தொகுதியில் நிலவும்

 பிரச்சனைகள், கூட்டணி கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அனைத்தும் சரி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு,திமுக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதை மேலும் மெருகேற்றும் வகையில் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகளை அழைத்து நாங்கள் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.நிச்சயம் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும்.மதுரையில் த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சர் என குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு,நூறு ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் அடிக்கலாம் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision