மணப்பாறை அருகே 2 குழந்தைகளுக்கு  எலி பேஸ்ட் கொடுத்த தானும் தின்ற தாய். 3 பேரும் உயிரிழப்பு

மணப்பாறை அருகே 2 குழந்தைகளுக்கு  எலி பேஸ்ட் கொடுத்த தானும் தின்ற தாய். 3 பேரும் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியை சேர்ந்வர் நித்யா (27), (பஞ்சாலை தொழிலாளி). கடந்த 8-ஆண்டுகளுக்கு முன் முருகேசன் என்பவருடன் திருமணம் ஏற்பட்டது. கணவன் - மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு தாய் வீட்டிற்கு குழந்தைகளோடு நித்யா சென்றுள்ளார்.

இந்நிலையில் விரக்தியடைந்த நித்யா தானும், குழந்தைகளான நல்லக்கண்ணு (7), ரோகித் (4) ஆகியோருக்கு எலி பேஸ்ட் கொடுத்ததில், தாய் நித்யா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் குழந்தைகள் நல்லக்கண்ணு, ரோகித்தும் கிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையில் நித்யா எழுதி வைத்ததாக கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மரணத்திற்கு கணவரும், அவருடைய அக்காவும் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP