திருச்சி வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு-அமைச்சர் மகேஸ் அழைப்பு

திருச்சி வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு-அமைச்சர் மகேஸ் அழைப்பு

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் - கழக தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு !மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !

கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15/06/2025 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வர உள்ளார் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்க உள்ளோம் . கீழ்க்கண்ட அனைத்து நிர்வாகிகளும் விமான நிலையம் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் . 

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision