திருச்சி அருகே கிணற்றில் பெண் சடலமாக மீட்பு.

திருச்சி அருகே கிணற்றில் பெண் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் அருகே உள்ளது ஈச்சம்பட்டி கிராமம் இங்கு ஏசி மெக்கானிக்காகா பணிபுரிபவர் பிரபு. இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி அவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இன்று திவ்யா அருகே உள்ள பெரியசாமி தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் திவ்யா மூழ்கி இறந்து உள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் தீயணைப்புத் துறையினர் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் போராட்டத்திற்கு பிறகு திவ்யா சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டு புலிவலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

திவ்யாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த பெண் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision