திருச்சி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு - எதிர்ப்பு,வாக்குவாதம்

திருச்சி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர்  வாக்கு சேகரிப்பு -  எதிர்ப்பு,வாக்குவாதம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நானா மூனா பள்ளிவாசல் பகுதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்டவர்கள் வாக்கு சேகரித்தனர், 

அப்போது பள்ளிவாசலில் உள்ளே கட்சிக் கொடிகள் உடன் வாக்கு சேகரிக்க வேண்டாம் வெளியில் நின்று வாக்கு சேகரியுங்கள் என்று கூறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பள்ளிவாசல் வெளியே நின்று மீண்டும் வாக்கு சேகரித்துச்  சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision