அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம்

அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர் ஜீத் சிங் பிட்டா. இவர் 4 நாட்கள் ஆன்மிக பயணமாக தமிழகம் வந்த இவர் விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார். பின்னர் காஜாமலை பகுதியிலுள்ள உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், இன்று காலை திருவனைக்காவல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இவருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால் இவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து சமயபுரம் தென் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கார் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்கிறார்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கும் அவர் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார் 26ம் தேதி இரவு கும்பகோணத்தில் இருந்து திருச்சிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கிவிட்டு. 27ம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். திருச்சிக்கு அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர் ஜீத் சிங் பிட்டா வருவதையொட்டி அவர் தங்கும் இடம் மட்டும் அவர் செல்லும் வழித் தடங்கள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO