திருச்சி மாநகராட்சியில் அனைத்து வகையான அழகு நிலையம் நடத்துவோரும் உரிமம் பெற வேண்டும் - ஆணையர் அறிவிப்பு!!

திருச்சி மாநகராட்சியில் அனைத்து வகையான அழகு நிலையம் நடத்துவோரும் உரிமம் பெற வேண்டும் - ஆணையர் அறிவிப்பு!!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடித்திருத்தம், அழகுநிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் நடத்துவோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் நியைலம் நடத்வோரும், நிலைய உரிமையாளரும் பொறுப்பானவராக கருதி நிலையத்தை மூடி முத்திரையிடுதல் போன்ற அனைத்து சட்டபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

Advertisement

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் முடித்திருத்தகம்/ அழகுநிலையம் ஸ்பா/ மசாஜ் நிலையம் நடத்துவோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து பெற்று, இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம், (தமிழ்நாடு சட்டம் 27/1994) மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360 ன்படி தவறாமல் உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

Advertisement

தவறும் பட்சத்தில், தங்களது தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாக கருதி நிலையம் நடத்துவோரும், நிலைய உரிமையாளரும் பொறுப்பானவராக கருதி நிலையத்தை மூடி முத்திரையிடுதல் உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.