திருச்சியில் நாளை 21.06.2021 மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை 21.06.2021 மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை 21.06.2021 அவசரகால் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதில் மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர், சிறுகமணி கே.சாத்தனூர், அளுந்தூர், மணிகண்டம், பெட்டவாய்த்தலை, அம்மாபேட்டை, அதவத்தூர், தீரன் நகர், அம்பிகாபுரம் திருவரம்பூர், துவாக்குடி, டவுன்ஷிப் வாழவந்தான் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஸ்ரீரங்கம் அன்னை அவென்யு, சக்திநகர், தாயார் சன்னதி, திருவானைக்காவல், அழகிரிபுரம், நம்பர் 1 டோல்கேட், தாளக்குடி கீரமங்கலம், இனாம் சமயபுரம் டோல்பிளாசா, எஸ்.புதூர், கொணலை, கல்பாளையம், இருங்களூர், புறத்தாக்குடி மாணிக்கபுரம், கரியமாணிக்கம், கண்ணியகுடி, தேவிமங்கலம், மேலவங்காரம், ஸ்ரீராம்புதூர், பாலையூர் வலையூர், கூத்தூர், பழூர், பணமங்கலம் வைப்பூர் வல்லுக்கொடி, சங்கர்நகர், வால் மால்பாளையம், மூவராயன், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருச்சி நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை டி டி ரோடு, கீழக்கொல்லை, நவாப்தோட்டம், நெசவாளர் காலனி, டாக்கர் ரோடு, குழுமணி ரோடு, லிங்க நகர், மருதாண்டகுறிச்சி, கொடப்பு,  உக்கிரகாளியம்மன் கோவில் பகுதி, குளிக்கரை ரோடு, எஸ்.ஆர்.சி காலேஜ் ரோடு, வடக்கு ஆண்டார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய நகரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

மேலும் மணப்பாறை பகுதிகளில் மணப்பாறை, புத்தாநத்தம், பன்னாங்கொம்பு, துவரங்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோக பெரும் பகுதிகளில் நாளை காலை 09.30 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF