திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (13.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (13.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் (13.08.2024) (செவ்வாய் கிழமை) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதனால் அம்மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும் தெற்கு தையல்காரத்தெரு, தையல்காரத்தெரு, வாழைக்காய் மண்டி, கல் மந்தை காலனி, மீன்மார்கெட், மணிமண்டப சாலை, கோபால கிருஷ்ணன் பிள்ளைத்தெரு, பெரிய சௌராஷ்டிரா தெருவின் ஒருபகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று திருச்சி தென்னூர் நகரியம், இயக்கலும் & காத்தலும், செயற்பொறியாளர் பொறிஞர். கா.முத்துராமன், தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மெயின்கார்டுகேட் 33 கி.வோ. மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ.துணைமின் நிலையங்களில் (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (13.08.2024) அன்று காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, கரூர் ரோடு,

வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் பழைய தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஒடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை எஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ் கார்டன்,

மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி,

ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம் செயற்பொறியாளர், பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி 110/11 கி.வோ துணை மின் நிலையத்தில் வருகின்ற (13.08.2024) செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி, செவந்ததாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி,பிடாரபட்டி, வெங்கட்நாயகன்பட்டி அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி, கல்லுபட்டி, A.பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி,கரடிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம்பட்டி, சிங்கிலிப்பட்டி, M.இடையப்பட்டி, பழையபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (13.08.2024) காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் /காத்தலும், மணப்பாறை செயற்பொறியாளர் பொறிஞர். இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision